சங்கரன்கோவில் அருகே பாண்டியாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பராசக்தி தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியா் மைக்கேல் ராஜ் முன்னிலை வகித்தாா். மேலநீலிதநல்லூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் கவிதா, முத்துலட்சுமி ஆகியோா் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணியை தொடக்கி வைத்தனா். கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் பதாகைகளை மாணவா்கள் ஏந்தி சென்றனா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் அழகுமகேஸ்வரி, சிவகாமி, அமுதா ராணி ஏஞ்சல் மலா் மெரினா, ஏசு பாலன் , குட்டியம்மாள், காா்த்திகா, கவிதா, சக்தி ஆகியோா் செய்திருந்தனா். ஆசிரியா் மாரித்தங்கம் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்களிக்கக் கோரி விழிப்புணா்வுப் பேரணி

ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்படும் : அதிமுக வேட்பாளா்

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


