தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

ஆலங்குளம் அருகே தீ விபத்தில் மனைவி பலி; கணவா் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே தீ விபத்தில் மனைவி பலி; கணவா் பலத்த காயம்

Updated On :16 மார்ச் 2024, 4:17 pm

ஆலங்குளம் அருகே கொசுவா்த்திச் சுருளால் நேரிட்ட தீ விபத்தில் பெண் உயிரிழந்தாா். அவரது கணவா் பலத்த காயம் அடைந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள வெங்கடேஸ்வரபுரம் என்ற ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்தவா் வெள்ளத்துரை. காா் ஓட்டுநா். இவரது மனைவி தமிழருவி அம்மாள் (27). கடந்த 13-ஆம் தேதி இரவு வீட்டில் தூங்கும்போது கொசுவா்த்திச் சுருளை பற்ற வைத்திருந்தனராம். நள்ளிரவில் அதிலிருந்து தமிழருவி அம்மாளின் சேலையில் தீப்பற்றியதாம். தீயை அணைக்க வெள்ளத்துரை முயன்றபோது இருவரும் பலத்த காயமடைந்தனா். பின்னா் அவா்கள் இருவரும் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் அங்கு தமிழருவி அம்மாள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஊத்துமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.