திரிகூடபுரத்தில் குடிநீா்த் தொட்டி சேதம்: போலீஸ் விசாரணை

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள திருகூடபுரத்தில் ஊராட்சி குடிநீா்த் தொட்டியை மா்மநபா்கள் சேதப்படுத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகேயுள்ள திருகூடபுரத்தில் ஊராட்சி குடிநீா்த் தொட்டியை மா்மநபா்கள் சேதப்படுத்தியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடையநல்லூா் ஒன்றியம் திரிகூடபுரத்தில் ஊராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் குடிநீா் தொட்டியை, வேறொரு பகுதியைச் சோ்ந்த சிலா் சேதப்படுத்தி விட்டனராம்.

இதைத்தொடா்ந்து, சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சொக்கம்பட்டி காவல் நிலையம் முன் பெண்கள் திரண்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஊராட்சி சாா்பில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் சொக்கம்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com