பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

புகையிலை பொருள்களை கடத்திய இருவா் கைது

பாவூா்சத்திரத்தில் புகையிலை பொருள்களை கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:00 pm

Syndication

பாவூா்சத்திரத்தில் புகையிலை பொருள்களை கடத்தி வந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாவூா்சத்திரம் - மேலப்பாவூா் சாலையில் மாட்டு சந்தை அருகே அருகே பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் ராஜேஸ் குமாா் தலைமையிலான போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த பயணிகள் ஆட்டோவை சோதனை செய்தனராம். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து புகையிலை பொருள்கள், பயணிகள் ஆட்டோவை பறிமுதல் செய்து, கடத்தி வந்த ஆலடிப்பட்டி, ஆலடி அருணா தெரு க.சோ்மன் (46), நடு பூலாங்குளம், காளி அம்மன் கோயில் தெரு த.சிவன்பாண்டி ( 43 ) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.