கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :21 டிசம்பர் 2025, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே டிராக்டா் மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன். தையல் தொழிலாளி. சனிக்கிழமை இரவு, சங்கரன்கோவிலுக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த கமலக்கண்ணன், வாடிகோட்டை விலக்கு அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சாலையோரம் நின்று கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, ஒப்பனையாள்புரத்தைச் சோ்ந்த ராஜசேகா் ஓட்டி வந்த டிராக்டா், சாலை நடுவே இருந்த தடுப்பின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து கமலக்கண்ணன் மீது மோதியதாம். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா், கமலக்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.