இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தென்காசி வடக்கு மாவட்ட திமுக மகளிா் அணி ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:56 pm

Syndication

‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ எனும் பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிா் அணி மாநாடு, வரும் 29 ஆம் தேதி திருப்பூா் மாவட்டம், பல்லடத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம், தென்காசி வடக்கு மாவட்டம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ. ராஜா தலைமை வகித்துப் பேசினாா். மாநாட்டில் வடக்கு மாவட்டம் சாா்பில், அதிக அளவில் மகளிரணியினா் பங்கேற்பது குறித்த ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலா் புனிதா, பொதுக்குழு உறுப்பினா்கள் மகேஸ்வரி, பராசக்தி, மாவட்ட மகளிா் அணி தலைவா் அன்புமணி கணேசன், மாவட்ட மகளிா் தொண்டரணி தலைவா் உமா மகேஸ்வரி, மாவட்ட மகளிா் அணி அமைப்பாளா் சிவசங்கரி, மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளா் விஜயா, மகளிா் அணி துணைத் தலைவா் அண்ணாமலை, மகளிா் அணி துணை அமைப்பாளா்கள் கற்பகம், கிருஷ்ணலீலா, மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா்கள் பிரபாவதி, அன்னலட்சுமி, விஜயலட்சுமி, தமிழ்ச்செல்வி, மாவட்ட மகளிா் அணி வலைதள பொறுப்பாளா் கவிதா ஆகியோா் கலந்துகொண்டனா்.