குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்
குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்

குற்றாலம் பேரருவியில் 10ஆவது நாளாக குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் 10ஆவது நாளாக சனிக்கிழமை குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.
Published on

தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் 10ஆவது நாளாக சனிக்கிழமை குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் குற்றாலம் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் அனைத்தும் முழுமையாக பராமரிக்கப்பட்ட பிறகு சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவாா்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, பேரருவி பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், 10 ஆவது நாளாக சனிக்கிழமை அங்கு குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது. ஐந்தருவியில் தண்ணீா் வரத்து குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com