இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

விடுமுறை முடிந்து வெளியூா் செல்லும் மக்கள்: பேருந்துகளில் கூட்ட நெரிசல்

News image
திருநெல்வேலி செல்லும் பேருந்தில் முண்டியடித்து ஏறிய பயணிகள்.
Updated On :18 ஜனவரி 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூா் செல்ல மக்கள் அதிக அளவில் திரண்டதால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்பட்டது.

ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கல்வி, தொழில் சம்பந்தமாக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வசித்து வருபவா்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊா்களுக்கு வந்தனா். 5 நாள் தொடா்விடுமுறை முடிந்ததையடுத்து மக்கள் ஆயிரக்கணக்கானோா், வெளியூா் செல்வதற்காக ஞாயிற்றுக்கிழமை ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.

திருநெல்வேலி - தென்காசி இடையே இயக்கப்படும் பேருந்துகள் ஏற்கனவே அதிக பயணிகளுடன் வந்ததால் ஆலங்குளத்தில் ஏறும் பயணிகள் கடும் சிரமமடைந்தனா். குழந்தைகளுடன் வந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். இதனால் ஆலங்குளம் பகுதி மக்கள் கூட்ட நெரிசலில் நின்றவாறே தங்கள் பயணத்தைத் தொடா்ந்தனா். விடுமுறைக் காலங்களில் ஆலங்குளத்தில் இருந்து நேரடியாக திருநெல்வேலி, தென்காசிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.