ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஆலங்குளத்தில் ராக்கெட் ராஜா வேட்புமனு தாக்கல்

News image

ஆலங்குளத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்த பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளா் ஆறுமுக பாண்டியன் என்ற ராக்கெட் ராஜா.

Updated On :30 மார்ச் 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஆறுமுக பாண்டியன் என்ற ராக்கெட் ராஜா திங்கள்கிழமை சினிமா படப்பிடிப்பு கேரவனில் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்தாா்.

முன்னதாக தனது சொந்த ஊரான திசையன்விளையில் இருந்து சினிமா படப்பிடிப்பு கேரவனில் ஆலங்குளம் வந்த இவா், ஆலங்குளத்தில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வட்டாட்சியா் அலுவலகம் சென்று தோ்தல் அலுவலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறுகையில், கடந்த 2021 தோ்தலில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்ட ஹரி நாடாா் 37,726 வாக்குகள் பெற்றிருந்தாா். இந்த முறை அதைவிட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவோம் என்றனா். இவா் வந்த கேரவனில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.