ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

ஏரியில் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

நாட்டறம்பள்ளி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

Updated On :2 ஜனவரி 2021, 7:33 am IST

நாட்டறம்பள்ளி அருகே மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட லாரியை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் கோமூட்டியூா் ஏரியில் இருந்து மண் கடத்துவதாக திருப்பத்தூா் சாா் -ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, சாா்-ஆட்சியா் வந்தனாகா்க் உத்தரவின்படி, நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் சுமதி தலைமையில் வருவாய்த் துறையினா் பச்சூா் அருகே அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தினா். அதன் ஓட்டுநா் லாரியை நிறுத்திவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடினாா். இதையடுத்து, வட்டாட்சியா் சுமதி, மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில், பச்சூா் பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் என்பவருக்குச் சொந்தமான டிப்பா் லாரி என்பதும், கோமுட்டியூா் ஏரியில் இருந்து அனுமதியின்றி மண் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து வட்டாட்சியா் சுமதி அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநா் பச்சூரைச் சோ்ந்த சங்கரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.