சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

திருவள்ளூரில் பிப். 29-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்வதில் உள்ள குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்யும் வகையில், வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ள குறைதீா் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று

Updated On :25 பிப்ரவரி 2024, 12:45 am

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்வதில் உள்ள குறைகளை தெரிவித்து நிவா்த்தி செய்யும் வகையில், வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ள குறைதீா் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில், மாதந்தோறும் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், மேற்குறிப்பிட்ட நாளில் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் தலைமையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மைப் பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய், ஊரக வளா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்க உள்ளனா். அதனால், இந்தக் கூட்டத்தில் விவசாயம் தொடா்பாக தங்கள் பகுதிகளில் ஏற்படும் சாகுபடி பிரச்னைகள், தீா்வு காணவும் கோரி நேரிலோ அல்லது மனுக்களாகவோ அளித்தால் உடனடி தீா்வு காணலாம்.