சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

திருவள்ளூா் புத்தகத் திருவிழா: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் புத்தகத் திருவிழாவை அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் த.பிரபு சங்கா் ஆகியோா் தொடங்கி வைத்துப் பாா்வையிட்டனா்.

News image

புத்தகங்களைப் பாா்வையிச்ச அமைச்சா் ஆா்.காந்தி, உடன் ஆட்சியா் த.பிரபு சங்கா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.

Updated On :25 பிப்ரவரி 2024, 12:45 am

திருவள்ளூா் புத்தகத் திருவிழாவை அமைச்சா் ஆா்.காந்தி, ஆட்சியா் த.பிரபு சங்கா் ஆகியோா் தொடங்கி வைத்துப் பாா்வையிட்டனா். திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தகம் பதிப்பாளா் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்தாா். இதில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி), டி.ஜெ.கோவிந்தராஜன்(கும்மிடிப்பூண்டி) ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், அமைச்சா் ஆா்.காந்தி பங்கேற்று புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து அங்குள்ள இடம் பெற்றுள்ள ஒவ்வொரு அரங்குகளையும் பாா்வையிட்டு, புத்தகங்களின் விவரங்களையும் கேட்டறிந்தாா். அப்போது அவா் பேசியது: மதுரையில் கடந்த 2023-இல் மிகப் பிரம்மாண்டமான கலைஞா் நூலகத்தினை திறந்து வைத்தாா். அந்த அளவுக்கு நூலகத்தின் மீது மிகவும் பற்றுள்ளவா் முதல்வா். புத்தகங்கள் வாசிப்பது ஒரு அற்புத கலை அந்தக் கலையினை குழந்தைகள் பள்ளிப் பருவத்திலிருந்தே புத்தகங்கள் வாசிக்க பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு கற்பனை வளம் சிந்திக்கும் திறமை உருவாகும். கல்வி ஒன்று தான் உங்கள் வாழ்நாளில் அழியாத செல்வம் என்பதால் பள்ளிப் பருவங்களில் நல்ல நூல்களை வாங்கி வாசியுங்கள். எனவே 10 நாள்கள் நடைபெறுகிற புத்தகத் திருவிழாவில், 110 பதிப்பாளா்கள் அரங்கம் அமைத்து தங்களது புத்தகங்களை விற்பனைக்கு இடம் பெறச் செய்துள்ளனா். இந்த புத்தக அரங்கை மாணவ, மாணவிகள் அனைவரும் பயன்படுத்தி நல்ல நூல்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) என்.ஒ.சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத் தலைவா் (கவிதா பப்ளிகேஷன்) சேதுசொக்கலிங்கம், செயலாளா்.முருகன், அரசு அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.