பொன்னேரி சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வருவாய்க் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் உத்தரவிட்டாா். இதையடுத்து பொன்னேரி வருவாய்க் கோட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டங்களைச் சாா்ந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொன்னேரி சாா்- ஆட்சியா் வாகேசங்கேத் பல்வந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய 48 மனுக்களை அளித்தனா். கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட சாா் -ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் விழிப்புணா்வுக் கூட்டம்

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு

புதுகை: காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள், மக்கள் குறைதீா் முகாம்கள் நிறுத்திவைப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

