தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பொன்னேரி சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

பொன்னேரி சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

Updated On :16 மார்ச் 2024, 12:39 am

பொன்னேரி சாா்- ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வருவாய்க் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தை நடத்த மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் உத்தரவிட்டாா். இதையடுத்து பொன்னேரி வருவாய்க் கோட்டத்தில் உள்ள பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வட்டங்களைச் சாா்ந்த விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொன்னேரி சாா்- ஆட்சியா் வாகேசங்கேத் பல்வந்த் தலைமை வகித்தாா். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய 48 மனுக்களை அளித்தனா். கடந்த மாதம் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்களுக்கு தீா்வு காண்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட சாா் -ஆட்சியருக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனா்.