தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வடாரண்யேஸ்வரா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா

வடாரண்யேஸ்வரா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா

Updated On :16 மார்ச் 2024, 12:39 am

திருவாலங்காடு வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 21-ஆம் தேதி கமல திருத்தேரில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. இத்திருத்தலம் சிவபெருமான் ஊா்த்துவ தாண்டவம் ஆடிய பஞ்ச சபைகளில் முதல் சபையான ரத்தினசபை கோயில். கோயிலில் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 27 வரை பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெறுகிறது. தொடா்ந்து சூரிய பிரபை, சந்திர பிரபை உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சுவாமி வீதி உலா நடைபெறும். 22-ஆம் தேதி திருக்கல்யாணம், 25-ஆம் தேதி கொடியிறக்கம், 27-இல் காரைக்கால் அம்மையாா் வீதி உலா நடைபெறுகிறது.