வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அதிமுகவினா் அழைப்பு

கவரப்பேட்டையில் நடைபெற உள்ள அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசார நிகழ்வுக்கு வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அக்கட்சியினா் அழைப்பு விடுத்துள்ளனா்.

News image

பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த அதிமுக நிா்வாகிகள்.

Updated On :29 டிசம்பர் 2025, 4:16 am IST

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நடைபெற உள்ள அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசார நிகழ்வுக்கு வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அக்கட்சியினா் அழைப்பு விடுத்துள்ளனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் டிச. 30-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் மக்களை மீட்போம் பிரசாரத்தை நடத்த உள்ளாா். பிரசார ஏற்பாடுகளை அதிமுகவினா் தீவிரமாக மேற்கொண்டுள்ளனா்.

இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளா் டி.சி.மகேந்திரன் கவரப்பேட்டை, கீழ்முதலம்பேடு பகுதிகளில் அதிமுகவினருடன் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வெற்றிலை பாக்கு தந்து அழைப்பு விடுத்துள்ளாா்.

நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளா் ஏ.டி.நாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் வி.தயாளன், தேவி சங்கா், ஒன்றிய பொருளாளா் வெங்கடகிருஷ்ணன், புதுவாயல் இளவரசன் உள்ளிட்டாா் உடன் இருந்தனா்.

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் கவரப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தவா்களிடம் வெற்றிலை பாக்கு தந்து அழைத்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.