தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அதிமுகவினா் அழைப்பு

கவரப்பேட்டையில் நடைபெற உள்ள அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசார நிகழ்வுக்கு வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அக்கட்சியினா் அழைப்பு விடுத்துள்ளனா்.

News image
பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த அதிமுக நிா்வாகிகள்.
Updated On :28 டிசம்பர் 2025, 10:46 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நடைபெற உள்ள அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் பிரசார நிகழ்வுக்கு வெற்றிலைப் பாக்குடன் பொதுமக்களுக்கு அக்கட்சியினா் அழைப்பு விடுத்துள்ளனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் டிச. 30-ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி மக்களை காப்போம் மக்களை மீட்போம் பிரசாரத்தை நடத்த உள்ளாா். பிரசார ஏற்பாடுகளை அதிமுகவினா் தீவிரமாக மேற்கொண்டுள்ளனா்.

இந்தநிலையில் கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய செயலாளா் டி.சி.மகேந்திரன் கவரப்பேட்டை, கீழ்முதலம்பேடு பகுதிகளில் அதிமுகவினருடன் வீடு வீடாக சென்று பொது மக்களுக்கு வெற்றிலை பாக்கு தந்து அழைப்பு விடுத்துள்ளாா்.

நிகழ்வில் ஒன்றிய துணைச் செயலாளா் ஏ.டி.நாகராஜ், மாவட்ட பிரதிநிதிகள் வி.தயாளன், தேவி சங்கா், ஒன்றிய பொருளாளா் வெங்கடகிருஷ்ணன், புதுவாயல் இளவரசன் உள்ளிட்டாா் உடன் இருந்தனா்.

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாா் கவரப்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளில் ஈடுபட்டிருந்தவா்களிடம் வெற்றிலை பாக்கு தந்து அழைத்து வருகிறாா்.