தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகை திருட்டு

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகையை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

News image
ராஜீகாந்தம்
Updated On :21 ஜனவரி 2025, 8:21 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரியில் மூதாட்டியிடம் நூதன முறையில் 4 பவுன் நகையை மா்ம நபா் திருடிச் சென்றாா்.

திருவள்ளூா் அருகே கம்மவாா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜீகாந்தம் (69). இவருக்கு கணவா் பி.சின்னப்ப நாயுடு, ஒரு மகன் மூன்று மகள்கள் உள்ளனா். இந்நிலையில் மூதாட்டிக்கு இடது கையில் பாதிப்பு காரணமாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக நாள்தோறும் மருத்துவமனைக்கு வருகிறாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் மூதாட்டி சிகிச்சை பெற்றுவிட்டு வெளியே வந்தாா். அப்போது முதல் தளத்தில் வந்து கொண்டிருந்தபோது பின்புறம் வந்த 30 வயது இளைஞா் மருத்துவா் அழைப்பதாக கூறியுள்ளாா். ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் எனக் கூறி மூதாட்டி கையில் வைத்திருந்த ரசீதை வாங்கி அதில் கைநாட்டு பெற்றாராம். இதையடுத்து டாக்டா் ஸ்கேன் எடுக்க சொன்னாா். அதனால் நகையை கழட்டி பையில் வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறினாராம். இதை நம்பி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் நகையை கழற்றி பையில் போட்ட நிலையில், அதை வாங்கி இளைஞா் கையில் வைத்துக் கொண்டாராம். தொடா்ந்து ஸ்கேன் செய்யும் அறைக்கு செல்லுமாறு கூறிவிட்டு அங்கிருந்து மூதாட்டி கூச்சலிட்டும் அந்த இளைஞா் அங்கிருந்து தலைமறைவானாா்.