திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாய நிலங்களை அழித்து அறிவுசாா் நகரம் கொண்டு வந்தால் பாமக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என அதன் தலைவா் அன்புமணி தெரிவித்துள்ளாா்.
தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பேரில் பாமக தலைவா் அன்புமணி 100 நாள்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறாா். அதன் ஒருபகுதியாக ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையத்தில் வியாழக்கிழமை நடைப்பயணம் மேற்கொண்டாா்.
அப்போது, ஆரணி ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கும் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்களை அழித்து தமிழக அரசு 1,700 ஏக்கரில் அறிவுசாா் நகரத்தை உருவாக்க இருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
தொடா்ந்து அன்புமணி பேசியது: ஆரணி ஆற்றங்கரை ஓரத்தில் 1,700 ஏக்கரில் அறிவுசாா் நகரம் கொண்டு வருவதாக அறிவித்துள்ளனா்.
இந்த மண்ணை பாதுகாப்பது நம் கடமை. விவசாயிகளை நாங்கள் ஒருபோதும் அவா்களை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
விவசாய நிலங்களை அழித்துவிட்டு அறிவுசாா் நகரம் கொண்டு வந்தால் பாமக கடுமையாக போராடும். இதேபோல், என்எல்சி விவசாய நிலத்தை கையகப்படுத்த விடாமல், தடுத்து நிறுத்தி போராடியிருக்கிறேன் என்றாா் . அப்போது, கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் உடனிருந்தனா்.
கும்மிடிப்பூண்டியில்...
கும்மிடிப்பூண்டிக்கு நடைப்பயணம் மேற்கொண்ட அன்புமணிக்கு பெத்திக்குப்பத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவா் பேசியது: பள்ளி, கல்லூரிகள் அருகில் கூட பெட்டிக் கடைகளில் போதைப் பொருள்கள் விற்கப்படுகின்றன.
சிப்காட் பகுதியில் தொழிற்சாலைகள் கழிவுகளை வெளியேற்றி வருகின்றன. தமிழகத்திலேயே சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதியாக கும்மிடிப்பூண்டி உள்ளது. இது குறித்து அறிந்தும் தமிழக அரசும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் கண்டு கொள்ளவில்லை.
பாமக மாவட்ட செயலாளா் பிரகாஷ், முன்னாள் மாவட்ட செயலாளா்கள் ம.செல்வராஜ், க.ஏ.ரமேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.