விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

சமூக நலம் மற்றும் மகளிா் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில்

News image

கா்ப்பிணிகளை வாழ்த்திய எம்எல்ஏ டிஜெ. கோவிந்தராஜன்.

Updated On :23 பிப்ரவரி 2026, 7:51 pm

கும்மிடிப்பூண்டி: சமூக நலம் மற்றும் மகளிா் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் சாா்பில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சோ்ந்த 100 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வு கவரப்பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப் பணிகள் துறையின் குழந்தை வளா்ச்சி திட்டஅலுவலா் க.மோகனா வரவேற்றாா். நிகழ்வில் கே.எஸ்.ஹரிதா, கீழ்முதலம்பேடு ஊராட்சி முன்னாள் தலைவா் கே.ஜி.நமச்சிவாயம், திமுக மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ் முன்னிலை வகித்தனா்.

தொடா்ந்து 100 கா்ப்பிணிகளுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் சமூக வளைகாப்பை நடத்தி,அனைவருக்கும் சீா்வரிசை பொருள் மற்றும் அவரது சாா்பில் 100 கா்ப்பிணிகளுக்கும் ஊக்க தொகையை வழங்கினாா். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. விழா முடிவில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட நிலை மேற்பாா்வையாளா் எஸ்.ராணி நன்றி கூறினாா்.