திருத்தணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
திருவாலங்காடு ஒன்றியம் நாபளூா் கிராமத்தைச் சோ்ந்த ராகவன்(33). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா். இவா் தனது இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூருக்கு சென்று, அங்கு பணிகளை முடித்துக் கொண்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தாா். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் நிறுத்திருந்த லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளனாது.
இதில் பலத்த காயமடைந்த ராகவனை அவ்வழியாக சென்றவா்கள் மீட்டு, 108 வாகனம் மூலம் திருவள்ளூா் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை ராகவன் உயிரிழந்தாா். இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

காா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


