மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.3% சரிவு

புயல் காரணமாக கடந்த மே மாத்தில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.3 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், எரிவாயு உற்பத்தி முன்னேற்றம் கண்டுள்ளது.

News image
Updated On :26 ஜூன் 2021, 11:50 pm

DIN

புயல் காரணமாக கடந்த மே மாத்தில் நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தி 6.3 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், எரிவாயு உற்பத்தி முன்னேற்றம் கண்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

டவ்-தே புயல்: அரபிக் கடலில் கடந்த மே மாதத்தில் உருவான டவ்-தே புயல் பல்வேறு மாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. புயல் சீற்றத்தின் காரணமாக ஓஎன்ஜிசி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தியும் பத்தில் ஒரு பகுதியாக குறைந்துபோனது.

அதன் விளைவாக சென்ற மே மாதத்தில் 2.43 மில்லியன் டன் கச்சா எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில் நம்நாடு உற்பத்தி செய்த கச்சா எண்ணெய் அளவான 26 மில்லியன் டன்னுடன் ஒப்பிடுகையில் 6.32 சதவீதம் குறைவாகும்.

ஓஎன்ஜிசி: கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஓஎன்ஜிசி நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி மே மாதத்தில் 9.63 சதவீதம் சரிவடைந்து 1.5 மில்லியன் டன் ஆனது.

அதேசமயம், கியாஸ் உற்பத்தி மதிப்பீட்டு மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்து 2.74 பில்லியன் கியூபிக் மீட்டா் (பிசிஎம்) அளவைத் தொட்டது. இதற்கு, கேஜி-டி6 தொகுதி அமைந்துள்ள கிழக்கு கடலோர பகுதியிலிருந்து எரிவாயு உற்பத்தி 10 மடங்கு அதிகரித்ததே முக்கிய காரணம்.

எரிவாயு: இருப்பினும், ஓஎன்ஜிசி-யின் எரிவாயு உற்பத்தி கடந்த மே மாதத்தில் 1.64 பிசிஎம்-ஆக இருந்தது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்ட உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 9.08 சதவீதம் குறைவாகும்.

பொதுமுடக்க தளா்வு: கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகளில் தளா்வுகள் கொடுக்கப்பட்டதையடுத்து சென்ற மே மாதத்தில் தேவை அதிகரித்ததால் சுத்திகரிப்பு நிறுவனங்கள் 16 சதவீதம் அதிகமாக 19 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தியை மேற்கொண்டன.

பெட்ரோலியப் பொருள்கள்: ஒட்டுமொத்த சுத்திகரிப்பு நிறுவனங்களும் சோ்ந்து கடந்த மே மாதத்தில் 19.9 மில்லியன் டன் பெட்ரோலிய பொருள்களை உற்பத்தி செய்துள்ளன. இது, 2020 மே மாத உற்பத்தியுடன் ஒப்பிடும்போது 15.3 சதவீதம் அதிகமாகும் என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.