பங்குச்சந்தை 500 புள்ளிகள் சரிவுடன் தொடக்கம்

பங்குச்சந்தை வணிகம் இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. 
பங்குச்சந்தை 500 புள்ளிகள் சரிவுடன் தொடக்கம்
Updated on
1 min read

மும்பை: பங்குச்சந்தை வணிகம் இன்று காலை நிலவரப்படி சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியது. 

உலோகம், நிதியியல், வங்கி மற்றும் ஐடி பங்குகளில் அதிக விற்பனை காணப்பட்டது. 

காலை 10.15 மணியளவில், சென்செக்ஸ் 49,536.26 ஆக வர்த்தம் செய்து, 515.18 புள்ளிகள் சரிந்து, 50,051.44 புள்ளியிலிருந்து 1.03 சதவீதமாக குறைந்தது. 

இது 49,786.47-க்கு தொடங்கி, 49,854.58 என்ற உச்சகட்டத்தையும் 49,529.23 புள்ளிகளையும் எட்டியுள்ளது.

எனினும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் சரிந்து 14,657.95 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. 

சென்செக்ஸில் பெரும் இழப்புகளாக டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகும். அதேநேரத்தில் அதிக லாபமாக ஆசிய பெயிண்ட்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பவர் கிரிட் ஆகியவை ஆகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com