நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

இந்தியாவில் குடும்ப வணிகங்களில் அம்பானி குழுமம் மிகவும் மதிப்புமிக்கது!

பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் குழுமம் கோலோச்சி வருகிறது.

News image

ரிலையன்ஸ் குழுமம்

Updated On :8 ஆகஸ்ட் 2024, 8:31 pm IST

மும்பை: பெட்ரோலியம், தொலைத்தொடர்பு என பல்வேறு துறைகளில் ரிலையன்ஸ் குழுமம் கோலோச்சி வருகிறது. இந்நிலையில் ரூ.25.75 லட்சம் கோடியுடன் அம்பானி குடும்பம் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகமாக மாறியுள்ளது என்று இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

பார்க்லேஸ் பிரைவேட் கிளையண்ட்ஸ் ஹுருன் இந்தியா நடத்திய ஆய்வின் மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் பட்டியலில் பஜாஜ் குடும்பம் ரூ.7.13 லட்சம் கோடியுடன் இரண்டாவது இடத்திலும், பிர்லாஸ் ரூ.5.39 லட்சம் கோடியுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

அதானி குடும்பத்தின் மதிப்பு பட்டியலில் ரூ.15.44 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை தலைவர்களைக் கொண்ட முதல் தலைமுறை குடும்ப பட்டியலில் அதானி குழுமம் முதலிடத்தில் உள்ளது. அதே வேளையில் சீரம் பூனவல்லா குடும்பம் ரூ.2.37 லட்சம் கோடி மதிப்புள்ள வணிகத்துடன் அவர்களைப் பின்தொடர்கிறது.

ஹுருன் இந்தியாவின் நிறுவனரும் தலைமை ஆராய்ச்சியாளருமான அனஸ் ரஹ்மான் ஜுனைத் கூறுகையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, குடும்ப வணிகங்களில் நான்கில் மூன்று பங்கு மதிப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.