பேடிஎம் வங்கி சேவைகளை நிறுத்தியுள்ள நிலையில் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநராகச் செயல்பட நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) அனுமதி அளித்துள்ளது.
நான்கு வங்கிகளுடன் இணைந்து 5 கையாளும் முகவரிகளில் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் யுபிஐ செயலியாக பேடிஎம் செயல்படவுள்ளது.
முந்தைய பின்னொட்டு முகவரியான @பேடிஎம் மூலம் செயல்படுத்தப்படும் பரிவர்த்தனைகள் யெஸ் வங்கிக்கு திருப்பி விடப்படும். பயனர்கள் இதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. புதிய முகவரியாக @பிடியெஸ் என்கிற பின்னொட்டு செயல்படும்.
நான்கு வங்கிகள் முறையே ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஆக்சிஸ், யெஸ் பேங்க் பேடிஎம் செயலிக்கான பண பரிவரித்தனைகள் கட்டமைப்பு வழங்குநர்களாக செயல்படவுள்ளன.
ஹேண்டில்கள் @பிடிஹெச்டிஎஃப்சி, @பிடிஎஸ்பிஐ ஆகியவற்றுக்கு தேசிய பரிவர்த்தனைகள் கழகம் அனுமதியளித்த போதும் அவை உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முழுமையாக வாசிக்கப்பட்ட ஆளுநா் உரை

யுபிஐ, கிரெடிட் கார்டு, வரி, பங்குச் சந்தை! ஜூன் 15 முதல் புதிய விதிமுறைகள்!

யுபிஐ பரிவா்த்தனைகள் மே மாதத்தில் புதிய உச்சம்!

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
விடியோக்கள்

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK

தலைவரைத் துதிபாடும் இடமல்ல பேரவை! பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu




