பேடிஎம் வங்கி சேவைகளை நிறுத்தியுள்ள நிலையில் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநராகச் செயல்பட நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) அனுமதி அளித்துள்ளது.
நான்கு வங்கிகளுடன் இணைந்து 5 கையாளும் முகவரிகளில் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் யுபிஐ செயலியாக பேடிஎம் செயல்படவுள்ளது.
முந்தைய பின்னொட்டு முகவரியான @பேடிஎம் மூலம் செயல்படுத்தப்படும் பரிவர்த்தனைகள் யெஸ் வங்கிக்கு திருப்பி விடப்படும். பயனர்கள் இதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. புதிய முகவரியாக @பிடியெஸ் என்கிற பின்னொட்டு செயல்படும்.
நான்கு வங்கிகள் முறையே ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஆக்சிஸ், யெஸ் பேங்க் பேடிஎம் செயலிக்கான பண பரிவரித்தனைகள் கட்டமைப்பு வழங்குநர்களாக செயல்படவுள்ளன.
ஹேண்டில்கள் @பிடிஹெச்டிஎஃப்சி, @பிடிஎஸ்பிஐ ஆகியவற்றுக்கு தேசிய பரிவர்த்தனைகள் கழகம் அனுமதியளித்த போதும் அவை உடனடியாக செயல்பாட்டுக்கு வரவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!

இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம்

ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்!
இது 'க்யூஆர் கோடு' காலம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |




