சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து விற்பனையாகி வருகின்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலை, கடந்த வாரம் ரூ. 50,000-ஐ நெருங்கி மக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இருப்பினும், வாரத்தின் கடைசி நாள்களில் விலை சற்று குறைந்து சனிக்கிழமை சவரன் ரூ. 49,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை மீண்டும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.49,640-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராமின் விலை 6,205.
அதேபோல், வெள்ளி விலை இன்று 30 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ஒரு சவரன் தங்கம் ரூ.50,000-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வருவதால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.