
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.55,000-ஐ கடந்து திங்கள்கிழமை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. சனிக்கிழமை நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,850-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.54,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று காலை அதிரடியாக சவரனுக்கு ரூ.400 அதிகரித்து புதிய உச்சத்தை தங்கத்தின் விலை தொட்டுள்ளது.
சென்னையில் திங்கள்கிழமை காலை நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6,900-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.55,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கிடையே வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.3.50 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. முதல் முறையாக ரூ.100-ஐ கடந்துள்ளது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.101.00-க்கும், ஒரு கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையாகி வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.