மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

ஆகஸ்டில் உச்சம் தொட்ட தங்கம் இறக்குமதி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி முந்தைய ஆண்டின் அதே மாதத்தைவிட இரு மடங்கு அதிகரித்து புதிய மாதாந்திர உச்சத்தைத் தொட்டுள்ளது.

News image
Updated On :28 செப்டம்பர் 2024, 4:08 am IST

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி முந்தைய ஆண்டின் அதே மாதத்தைவிட இரு மடங்கு அதிகரித்து புதிய மாதாந்திர உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் தங்கம் இறக்குமதி1,006 கோடி டாலராக இருந்தது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர இறக்குமதியாகும்.

2023-ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாத்ததைவிட இது இரு மடங்குக்கும் மேல் அதிகமாகும். அப்போது இந்தியாவின் தங்கம் இறக்குமதி 493 கோடி டாலராக இருந்தது.

2024-2025-ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் நாட்டின் ஒட்டுமொத்த தங்கம் இறக்குமதி முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தைவிட 4.23 சதவீதம் குறைந்து 1,264 கோடி டாலராக உள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 4,554 கோடி டாலராக இருந்தது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது 30 சதவீதம் அதிகம் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டுக்குள் தங்கம் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக அதன் இறக்குமதி வரியை 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக பட்ஜெட்டில் மத்திய அரசு குறைத்தது. இதன் விளைவாக தங்கம் இறக்குமதி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பண்டிகைக் காலத்தையொட்டி தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதாலும் ஆகஸ்ட் மாதத்தில் அதன் இறக்குமதி இரட்டிப்பாகியுள்ளது என்று சந்தை வட்டாரங்கள் கூறின.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.