நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

ஹெச்சிஎல் பங்குகள் 7.7% உயர்வு!

இன்றைய வர்த்தகத்தில் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் நிஃப்டி-யில் 7.68% உயர்ந்து ரூ.1,593.60 ஆக முடிந்தது.

News image
Updated On :23 ஏப்ரல் 2025, 11:15 pm IST

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி-யில் 7.68% உயர்ந்து ரூ.1,593.60 ஆக முடிந்தது.

மார்ச் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 8.1 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,307 கோடியாக உள்ளது. அதே நேரத்தில் அதன் வருவாய் 6.1 சதவிகிதம் உயர்ந்து ரூ.30,246 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டில் ஹெச்சிஎல் டெக் நிகர லாபம் 11 சதவிகிதம் உயர்ந்து அதன் வருவாய் ரூ.1,17,055 கோடியாக இருந்தது. அதே வேளையில் அதன் லாபம் ரூ.17,390 கோடியாக உள்ளது. இது அதன் முந்தைய ஆண்டை விட 6.5 சதவிகிதம் அதிகம்.

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் நடப்பு நிதியாண்டில் 2 முதல் 5 சதவிகித வளர்ச்சியை எட்டும் என்று கணித்துள்ளது.

நிறுவனம் தனது 4-வது காலாண்டில் 3 பில்லியன் டாலர் மதிப்புள்ள புதிய ஆடர்களை பெற்றுள்ளது. அதே வேளையில், பங்கு ஒன்றுக்கு ₹18 இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்ததுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.