ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

4-வது காலாண்டு வருவாய்க்குப் பிறகு பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் 5% சரிவு!

என்.பி.எப்.சி. நிறுவனமான, பஜாஜ் பைனான்ஸ், மார்ச் 2025 காலாண்டில், அதன் நிகர லாபம், 16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2025, 7:26 pm IST

புதுதில்லி: என்.பி.எப்.சி. நிறுவனமான, பஜாஜ் பைனான்ஸ், மார்ச் 2025 காலாண்டில், அதன் நிகர லாபம், 16 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், பங்கின் விலையானது மும்பை பங்குச் சந்தையில் 4.99% சரிந்து ரூ.8,635.70 ஆக முடிவடைந்தது. இது பகலில் 5.82 சதவிகிதம் சரிந்து ரூ.8,560 ரூபாயாக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையில் 5.27 சதவிகிதம் சரிந்து ரூ.8,613.50 ஆக முடிந்தது.

இதனையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பானது ரூ.28,186.83 கோடி ரூபாய் குறைந்து ரூ.5,36,648.31 கோடி ரூபாயாக உள்ளது.

மார்ச் 31, 2025 வரையான காலாண்டில், பஜாஜ் பைனான்ஸ் நிகர லாபம் 16 சதவிகிதம் அதிகரித்து ரூ.3,940 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு அதே காலாண்டில் நிறுவனமானது ரூ.3,402 கோடி நிகர லாபம் பதிவு செய்தது.

2024-25ஆம் நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.12,764 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.15,808 கோடியானது. நிறுவனத்தின் வட்டி வருமானம் ரூ.11,201 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.13,824 கோடியானது.

ஒருங்கிணைந்த அடிப்படையில், நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.3,825 கோடியிலிருந்து 19 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,546 கோடியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.