குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ரூ.56,000 கோடி கடனை முன்னதாகச் செலுத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்!

நடப்பு நிதியாண்டில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரூ.56 ஆயிரம் கோடி முன்னதாகச் தவணை செலுத்தி, ரூ.1,200 கோடி வட்டியை மிச்சப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

News image

nhai

Updated On :5 ஜனவரி 2025, 10:48 pm IST

புதுதில்லி: நடப்பு நிதியாண்டில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரூ.56 ஆயிரம் கோடி முன்னதாகச் தவணை செலுத்தி, ரூ.1,200 கோடி வட்டியை மிச்சப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மொத்த கடன் ரூ.3.35 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இது 2024-25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டின் முடிவில் சுமார் ரூ.2.76 லட்சம் கோடியாக இருந்தது.

உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை வருமானத்திலிருந்து சுமார் ரூ.15,700 கோடி முன்னதாகச் செலுத்தப்பட்டது. அதே நேரத்தில் அதிக வட்டி விகிதங்களை வசூலிக்கும் தேசிய சிறு சேமிப்பு நிதி நிறுவனங்களுக்கு ரூ.30,000 கோடி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வுக்கு ரூ.10,000 கோடி ஆக மொத்தம் ரூ.40,000 கோடி முன்கூட்டியே கடன் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆனது தனது கடன் பொறுப்பை வெற்றிகரமாக குறைத்து வருகிறது என்றார் அந்த அரசு அதிகாரி.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் 2024-25 ஆம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.1.68 லட்சம் கோடியை ஒதுக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.