மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

அதானி வில்மர் பங்கு 10% சரிவு!

அதானி குழுமம் அதன் எஃப்எம்சிஜி நிறுவனத்தில் உள்ள 20% பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.7,148 கோடியை திரட்டும் என்ற செய்தியைத் தொடர்ந்து அதன் பங்குகள் சரிந்தது முடிந்தது.

அதானி குழுமம்

Published On :10 ஜனவரி 2025, 8:44 pm IST

புதுதில்லி: அதானி குழுமமானது, அதானி வில்மர் நிறுவனத்தில் உள்ள 20 சதவிகித பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் ரூ.7,148 கோடியை வெளிச்சந்தையில் திரட்டும் என்ற செய்தியைத் தொடர்ந்து, வில்மரின் பங்குகள் சுமார் 10 சதவிகிதம் வரை சரிந்தது முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையில் அதன் விலை 9.84 சதவிகிதம் வரை சரிந்து ரூ.292.05 ஆக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையில் 9.69 சதவிகிதம் வரை சரிந்து ரூ.292.10 ஆக உள்ளது. மத்திய வர்த்தகத்தில் சற்று மீண்டு ரூ.296.95 ஆக வர்த்தகம் ஆனது.

இதையும் படிக்க: ரூபாய் மதிப்பு சரிவான நிலையை எட்டியது!

கடந்த மாதம் அதானி வில்மரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு, குழுமமானது, ஜனவரி 10 ஆம் தேதி நிறுவனத்தில் 17.54 கோடி பங்குகளை (13.50 சதவிகித பங்குகள்) சில்லறை அல்லாத முதலீட்டாளர்களுக்கும், ஜனவரி 13 ஆம் தேதி (சில்லறை முதலீட்டாளர்களுக்கு) தலா ரூ.275 என்ற குறைந்தபட்ச விலையிலும் விற்பனை செய்யும். இதுகுறித்து நிறுவனமானது பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.