நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

59 முறை அதிக சந்தா பெற்ற கிரிசாக் ஐபிஓ!

மாணவர் ஆட்சேர்ப்பு மற்றும் தீர்வுகள் வழங்குநரான கிரிசாக் லிமிடெட், தனது ஐபிஓ-வின் இறுதி நாளில் இன்று 59.82 முறை சந்தா பெற்றதாக தெரிவித்துள்ளது.

News image

Crizac IPO

Updated On :4 ஜூலை 2025, 9:41 pm IST

புதுதில்லி: மாணவர் ஆட்சேர்ப்பு மற்றும் தீர்வுகள் வழங்குநரான கிரிசாக் லிமிடெட், தனது ஐபிஓ-வின் இறுதி நாளில் இன்று 59.82 முறை சந்தா பெற்றதாக தெரிவித்துள்ளது.

ரூ.860 கோடி மதிப்புள்ள ஆரம்ப பங்கு விற்பனையில் 2,58,36,909 விண்ணப்பத்திற்கு 1,54,56,79,488 பங்குகள் விற்பனைக்கு வந்ததாக தெரிவித்துள்ளது என்எஸ்இ தரவு.

தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கான பங்கு 134.35 மடங்கு அதிகமாக சந்தா பெற்ற நிலையில், நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீடு 76.15 மடங்கு சந்தாவைப் பெற்றது. அதே வேளையில் சில்லறை தனிநபர் முதலீட்டாளர்களிடம் 10.24 மடங்கு சந்தாவைப் பெற்றது கிரிசாக்.

ஆரம்ப சலுகை விலையாக பங்கு ஒன்றுக்கு ரூ.233 முதல் ரூ.245 என விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அதே வேளையில் நிறுவனம் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.258 கோடியைப் பெற்றுள்ளதாக தெரிவித்தது.

கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.1,000 கோடி திரட்ட முன்மொழிந்த நிறுவனம், வெளியீட்டு அளவை தற்போது ரூ.860 கோடியாகக் குறைத்துள்ளது. சலுகை அளவு குறைவதற்கான எந்த குறிப்பிட்ட காரணத்தையும் நிறுவனம் தெரிவிக்கவில்லை.

நிறுவனத்தின் பங்குகள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் பட்டியலிடப்படும்.

இந்த ஐபிஓ-விற்கான முன்னணி மேலாளர்களாக ஈக்விரஸ் கேபிடல் மற்றும் ஆனந்த் ரதி அட்வைசர்ஸ் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.