சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

சைஃப்கோ சிமெண்ட்ஸின் 60% பங்குகளை கைப்பற்றிய ஜே.கே சிமெண்ட்!

ஜம்மு-காஷ்மீரை தளமாகக் கொண்ட சைஃப்கோ சிமெண்ட்ஸின் 60 சதவிகித பங்குகளை ஜே.கே சிமெண்ட் ரூ.150 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published On :

புதுதில்லி: ஜம்மு-காஷ்மீரை தளமாகக் கொண்ட சைஃப்கோ சிமெண்ட்ஸின் பெரும்பான்மையான 60 சதவிகித பங்குகளை ஜே.கே சிமெண்ட் ரூ.150 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், ஸ்ரீநகரில் உற்பத்தி நடவடிக்கைகளை அமைக்கும் முதல் பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக ஜே.கே. குழும நிறுவனம் உருவெடுத்துள்ளது.

இதனையடுத்து, சைஃப்கோ சிமெண்ட்ஸின் நிர்வாக கட்டுப்பாட்டை தன் வசம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளது ஜே.கே சிமெண்ட்.

கையகப்படுத்தல் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட ஜே.கே. சிமெண்ட் லிமிடெட்டின் இணை நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான மாதவ்கிருஷ்ண சிங்கானியா, இந்த கையகப்படுத்துதலின் மூலம், ஜம்மு காஷ்மீரில் ஒரு வலுவான இருப்பை உருவாக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றார்.

அதே வேளையில், சைஃப்கோ சிமெண்ட்ஸ் குடும்பத்தை ஜேகே சிமெண்ட் குழுமத்தில் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்றார் ஜேகே சிமெண்ட் நிர்வாக இயக்குநர் ராகவ்பத் சிங்கானியா.

உலகளவில் வெள்ளை சிமெண்ட் உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும் ஜேகே சிமெண்ட்ஸ், மொத்த வெள்ளை சிமெண்ட் உற்பத்தி திறன் 1.12 மில்லியன் டன்னுடன் சுவர் புட்டி 1.33 மில்லியன் டன் உற்பத்தி செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.