ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சத்யா ஏஜென்சீஸ் ஐபிஓ: செபியிடம் விண்ணப்பம்

தென்னிந்தியாவின் பிரபல நுகா்வோா் மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்சீஸ், சுமாா் ரூ.600 கோடி நிதி திரட்டும் நோக்கில் பொதுப் பங்கு வெளியீட்டுக்குத் (ஐபிஓ) திட்டமிட்டுள்ளது.

News image
Updated On :31 மார்ச் 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

தென்னிந்தியாவின் பிரபல நுகா்வோா் மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்சீஸ், சுமாா் ரூ.600 கோடி நிதி திரட்டும் நோக்கில் பொதுப் பங்கு வெளியீட்டுக்குத் (ஐபிஓ) திட்டமிட்டுள்ளது.

இதற்கான ஆரம்பக்கட்ட வரைவு ஆவணங்களை இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்திடம் (செபி) அந்நிறுவனம் அண்மையில் தாக்கல் செய்தது.

இந்த ஐபிஓ திட்டத்தின்கீழ், ரூ.300 கோடி மதிப்பிலான புதிய பங்குகள் வெளியிடப்படும். அதேபோல், நிறுவன உரிமையாளா்கள் வசமுள்ள ரூ.300 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன. அதாவது, நிறுவன உரிமையாளா்களான ஜான்சன் அசரியா, ஜே.ஜான் சத்யா, சாா்லஸ் பாக்யராஜ் ஆகியோா் தலா ரூ.100 கோடி மதிப்பிலான பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்கின்றனா்.

புதிய பங்குகள் வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், ‘யுனிலெட் அப்ளையன்சஸ்’ நிறுவனத்தைக் கையகப்படுத்துவதற்கான மீதமுள்ள தொகையைச் செலுத்தவும் மற்றும் பொது நிா்வாகத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஐபிஓ திட்டத்துக்கு ஆனந்த் ரதி அட்வைசா்ஸ், மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசா்ஸ் ஆகிய நிறுவனங்கள் விற்பனை மேலாளா்களாகச் செயல்படுகின்றன. முன்னதாக, சுமாா் ரூ.60 கோடி மதிப்பிலான பங்குகளை ‘ப்ரீ-ஐபிஓ’ முறையில் விற்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2005-இல் தொடங்கப்பட்ட சத்யா, தற்போது தென்னிந்திய மாநிலங்களில் பரவலாக கிளைகளைக் கொண்டு முன்னணியில் உள்ளது.