திருவள்ளுவரும் முகுர நியூரான்களும்
வான்மீகி எப்படி கவிதை சுலோகத்தை கண்டடைந்தார் என்பது குறித்து ஒரு கதை வழங்கப்படுகிறது. வேடனாக இருந்து முனிவரானவர் வான்மீகி. ஒரு நாள், தன் சீடர்களுடன் செல்லும்போது, கிரௌஞ்ச பறவைகள் இணையில் ஒன்றை வேடனின் அம்பு கொன்று விட மற்றொன்று துடிப்பதை அவர் காண்கிறார். அதன் சோகத்தை தன்னில் உணர்கிறார்.










