

தேவையானவை:
கடலை பருப்பு - 2 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1கிண்ணம்
நெய், ஏலக்காய், முந்திரி,
திராட்சை - தலா 1 கிண்ணம்
செய்முறை:
கடலைப் பருப்பை ஊறவைத்து பின்பு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் நெய் விட்டு அதில் முந்திரி மற்றும் திராட்சையை வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.
பின்னர், அதே நெய்யில் கடலை மாவை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும். பின்பு, கடலை பருப்பு கலவை ஆறியவுடன் அதில் சர்க்கரை, தேங்காய்த் துருவல், ஏலக்காய், முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கடலைப் பருப்பு புட்டு தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.