திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

தினை பயத்தம் பருப்பு தோசை

News image
Updated On :4 பிப்ரவரி 2017, 12:00 am IST

தேவையான பொருட்கள்:
தினை அரிசி - 75 கிராம்
உளுந்தம் பருப்பு - 25 கிராம்
பயத்தம் பருப்பு - 25 கிராம்
கைக்குத்தல் அரிசி - 4 தேக்கரண்டி
வெந்தயம் - 2 கிராம்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - கைப்பிடி
கொத்துமல்லி - கைப்பிடி
பெருங்காயம் - 1 சிட்டிகை
இஞ்சி - நெல்லிக்காய் அளவு

செய்முறை: தினை அரிசி, உளுந்தம் பருப்பு, பயத்தம் பருப்பு, கைக்குத்தல் அரிசி, வெந்தயம் ஆகியவற்றைக் கழுவி சுமார் 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் ஊறவைத்த அரிசி கலவையுடன், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, பெருங்காயம், இஞ்சி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கிரைண்டரில் ஆட்டி எடுத்துக்கொண்டு உப்பு சேர்த்து அரை மணி நேரம் புளிக்க வைத்து பின் தோசையாக வார்த்தெடுக்கவும்.  சுவையான தினை பயத்தம்பருப்பு தோசை தயார்.

குறிப்பு: முதல் நாள் மாலையில் அரைத்த மாவை மறுநாள் காலையில் தோசையாக வார்த்தால் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.