அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

40 வயசு... நா.முத்துக்குமாரின் இழப்பு இன்னைக்கும் யோசிக்க யோசிக்கப் பதற வைக்கக் கூடிய ஒன்னு!

படைப்பாளியாகவே என்றென்றும் தன்னை முன் நிறுத்திக் கொள்ள விழையும் ஷைலஜாவுடனான இந்த ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் உரையாடலின் நடுவே இயக்குனர் பாலுமகேந்திரா, கவிஞர் மாதவிக்குட்டி, நா.முத்துக்குமார்

News image
Updated On :23 ஜனவரி 2019, 1:22 pm IST

தமிழில் பெண் பதிப்பாளர்கள் வெகு குறைவு. ஆண்களே ஆதிக்கம் செலுத்தி வரும் இத்துறையில் தனது கணவருடன் இணைந்து சரிநிகர் சமானமாக இலக்கியக் கூட்டங்கள், கதையாடல், மொழிபெயர்ப்புகள், புதிய எழுத்தாளர்களை இனம் கண்டு அவர் தம் எழுத்துக்களை பண்பட்ட வகையில் அறிமுகப்படுத்துதல் என பதிப்புத் துறையில் அசத்திக் கொண்டிருக்கிறார் கே.வி ஷைலஜா. 19. டி.எம்.சாரோன், திருவண்ணாமலையில் இருக்கும் இவர்களின் வீடென்பது தமிழ் இலக்கியப் பற்றாளர்கள் மற்றும் படைப்பாளிகளுக்கு மிக விருப்பமான புகலிடமாகப் பல ஆண்டுகளாக திகழ்ந்து வருகிறது. இவர்களது வாழ்க்கை பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். எழுத்தும், வாசிப்பும், அவை குறித்த தொடர் பகிர்தலுமாக இப்படி ஒரு வாழ்க்கையை நாமும் வாழக்கூடாதா என்ற ஏக்கம் இவர்களைப் பார்க்கும் பலருக்கும் வரலாம். ஆனால் அந்தப் பெருமைகள் ஏதும் ஷைலஜாவின் மூளைக்குள் ஏறியிருப்பதாகத் தெரியவில்லை. வெகு யதார்த்தமான மிக மிக ஆத்மார்த்தமான மனுஷியாக தான் வாசித்த, தான் பதிப்பித்த, தான் பழகிய மனிதர்கள் குறித்து அவர் பகிரும் போது அவர்களது வெற்றிக்கான காரணம் பிடிபட்டது.

வம்சி பதிப்பகத்தின் உரிமையாளராக அல்ல படைப்பாளியாகவே என்றென்றும் தன்னை முன் நிறுத்திக் கொள்ள விழையும் ஷைலஜாவுடனான இந்த ‘நோ காம்ப்ரமைஸ்’ நேர்காணல் உரையாடலின் நடுவே இயக்குனர் பாலுமகேந்திரா, மலையாளர் கவிஞர் மாதவிக்குட்டி, மறைந்த கவிஞர் நா. முத்துக்குமார், நடிகர் சிவக்குமார், திலகவதி ஐ பி எஸ், கேரளப் பிரபலமும் கதை கேட்கும் சுவர்கள் நாவலின் மூலமுமான  களப்பணியாளர் உமா பிரேமன், மலையாளப் படைப்பாளிகள் பலர் என இடையிடையே ஊடாடிச் செல்ல நேரம் பற்றிய பிரஞ்சையே இன்றி சுவாரஸ்யம் தொற்றிக் கொள்கிறது.

இது ஷைலஜாவுடனான நேர்காணலுக்கான முன்னோட்டம் மட்டுமே!

முழுமையான நேர்காணல் வரும் வெள்ளியன்று வெளியாகும்.
 

Related Article

பாகிஸ்தான்காரன் வந்து குண்டு போட்டான்னாக்க அவனுக்கு 1000 ரூபாய் கொடுப்பேன் நான்!

‘பெண்களைப் பார்த்தா கையெடுத்து கும்பிடற மாதிரி இருக்கனும், கை தட்டி கூப்பிடற மாதிரி இருக்கக் கூடாது’

விடியோக்களால் புகைப்படங்களின் இடத்தை ஒருக்காலும் ரீபிளேஸ் செய்ய முடியாது!

எனக்குத் தெரிந்த எஸ்.வி.சேகர், ராதாரவி கண்ணியமானவர்கள்!

ஒன்னு பணம் வரணும் இல்லனா புகழ் வரணும் ரெண்டுக்கும் வாய்ப்பு இல்லைன்னா?!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.