ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

150. அன்ன மென்னடி அரிவை - பாடல் 11

இறைவனைத் தொழுதெழும் அடியார்களின்

News image
Updated On :12 ஜனவரி 2020, 12:00 am IST


பாடல் 11:

பரசு பாணியைப் பத்தர்கள் அத்தனைப் பையரவோடு அக்கு
நிரை செய் பூண் திரு மார்புடை நிமலனை நித்திலப் பெரும் தொத்தை
விரை செய் பூம்பொழில் சிரபுரத்து அண்ணலை விண்ணவர் பெருமானைப்
பரவு சம்பந்தன் செந்தமிழ் வல்லவர் பரமனைப் பணிவாரே
 

விளக்கம்:

பாணி=கை; அத்தன்=தந்தை, தலைவன்; பையரவு=படம் எடுக்கும் பாம்பு; அக்கு=எலும்பு, சங்கு என்று இரு பொருள் கொண்ட சொல்; உருத்திராக்கம் என்ற பொருள் பல பாடல்களில் உணர்த்தப் படுகின்றது. விரை=நறுமணம்; பரசு=மழு ஆயுதம்;

பொழிப்புரை:

மழுப்படை ஏந்திய கையினை உடையவனும், அடியார்களுக்கு தந்தையாகவும் தலைவனாகவும் இருக்கும் பெருமானை, விடம் கொண்ட பாம்புடன், எலும்பு மாலையையும் தனது மார்பினில் நிறைந்திருக்கும் வண்ணம் பூண்டுள்ள அழகிய   மார்பினை உடையவனும், இயல்பாகவே மலங்களிளிருந்து நீங்கியவனும், முத்துக் குவியல்கள் குன்றாக இருக்கும் வண்ணம் காட்சி அளிப்பவனும், நறுமணம் வீசும் பூஞ்சோலைகள் நிறைந்த சிரபுரம் தலத்தின் தலைவனை, தேவர்களின் பெருமானைப், புகழ்ந்து ஞானசம்பந்தர் பாடிய செந்தமிழ் பாடல்களை முறையாக பாடும் அடியார்கள் பரமனைப் பணிந்து வணங்கும் அடியார்களாக விளங்குவார்கள்.

முடிவுரை:

இந்த பதிகத்தின் முதல் பத்து பாடல்களிலும், சிரபுரத்து இறைவனைத் தொழுதெழும்  அடியார்களின் வினைகள் அவர்களை விட்டு நீங்கிவிடும் என்று சம்பந்தர் கூறுகின்றார். தொழுதெழும் என்ற தொடர் மூலம், தரையில் விழுந்து பெருமானைப் பணிந்து பின்னர் எழும் அடியார்கள் என்று உணர்த்தப் படுகின்றது. பதிகத்தின் முதல் பாடலில், பெருமானைப் பணியும் அடியார்கள் வினைகளுடன் பொருந்தாமல், வினைகள் நீங்கப் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றும், இரண்டாவது பாடலில் வினைகள் அத்தகைய அடியார்களுடன் பிணைந்து நில்லாமல் விலகும் என்றும், மூன்றாவது மற்றும் எட்டாவது ஒன்பதாவது பாடல்களில் தலைவனைக் கும்பிடும் அடியார்களை வினைகளும் வினைகளால் ஏற்படும் குற்றங்களும் சென்று அடையா என்றும், நான்காவது பாடலில் ஆணிப் பொன்னாகிய இறைவனைத் தொழும் அடியார்களை  கொடிய வினைகள் சென்று அடையா என்றும், ஐந்தாவது பாடலில் சிரபுரத்து இறைவனைத் தொழும் அடியார்கள் தங்களது செயல்களால் உயிர்க்கு வருத்தும் விளைவிக்கும் வினைகளிலிருந்து விடுதலை பெற்று வருத்தம் அடையாமல் இருப்பார்கள் என்றும், ஆறாவது பாடலில் இறைவனைத் தொழும் அடியார்களை கொடிய வினைகள் சென்று அடையா என்றும், ஏழாவது மற்றும் பத்தாவது பாடல்களில் அத்தகைய அடியார்கள் தொல்லை தரும் வினைகள் நீங்கப்பெற்று தளர்வு ஏதும் இன்றி வாழ்வார்கள் என்றும் ஞானசம்பந்தர் கூறுகின்றார். நாமும் இந்த பதிகத்தை பக்தியுடன் முறையாக பாராயணம் செய்தும், சிரபுரத்து இறைவனை தொழுதெழுந்தும் நமது வினைகளை முற்றிலும் தீர்த்துக் கொண்டு, பிறப்பிறப்புச் சுழற்சியிலிருந்து  விடுபட்டு, முக்தி உலகம் சென்றடைந்து, என்றும் அழியாத பேரானந்தம் பெறுவோமாக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.