பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

2021 வர்த்தகம்

ஜன. 1: ரூ.50,000-க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு பயனாளிகளின் சில விவரங்களை மீண்டும் உறுதி செய்யும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.

News image
Updated On :28 ஜூலை 2025, 9:51 am IST
  • ஜன. 1: ரூ.50,000-க்கு மேற்பட்ட காசோலைகளுக்கு பயனாளிகளின் சில விவரங்களை மீண்டும் உறுதி செய்யும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
     
  • ஜன. 5: கரோனா தொற்றால் விற்பனையில் ஏற்பட்ட மந்தநிலையால் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) தனது பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை (விஆர்எஸ்) அறிவித்தது.
     
  • மார்ச் 19: முந்தைய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 சதவீதமாக இருந்த குடும்பங்களின் நிதிச் சேமிப்பு 2020 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 10.4 சதவீதமாக சரிவடைந்ததாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
  • ஏப்.1: தொடர்ந்து 6-ஆவது முறையாக நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியது.
     
  • ஏப்.10:  சந்தையில் ஆதிக்கம் செலுத்த விதிமுறைகளை மீறி செயல்பட்டதற்காக அலிபாபா நிறுவனத்துக்கு சீன ஒழுங்காற்று அமைப்பு 278 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,000 கோடி) அபராதம் விதித்தது.
     
  • மே 25: எண்ம (டிஜிட்டல்) ஊடக நிறுவனங்களுக்கான புதிய விதிமுறைகளுக்கு எதிராக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்ஸ்ஆப் நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
     
  • ஜூன் 12: வாராக் கடன்களைக் குறைத்துக் காட்டும் வகையில் இந்திய வங்கிகள் ரூ.1.53 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்தன.
  • ஜூலை 17: "ஜஸ்ட் டயல்' நிறுவனத்தை ரூ.5,710 கோடிக்கு கையகப்படுத்துவதாக ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் அறிவித்தது.
     
  • செப்.29: திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தும் பணி நிறைவடைந்து விட்டதாக பிரமல் எண்டர்பிரைசஸ் அறிவித்தது.
     
  • நவ.18: முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பேடிஎம் பங்குகள் மும்பை 
  • மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. ஆனால், முதலீட்டாளர்களின் வரவேற்பின்றி மும்பை பங்குச் சந்தையில் பேடிஎம் பங்குகளின் விலை 27 சதவீதம் சரிவடைந்து ரூ.2,150-லிருந்து  ரூ.1,564-ஆக குறைந்து நிலைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.