உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி திருச்சியில் செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :7 ஜனவரி 2021, 8:27 am IST

பணி நிரந்தரம் செய்யக் கோரி திருச்சியில் செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இரு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் செவிலியா்களை நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் சாா்பில் நடைபெறும் பல்வேறு கட்ட போராட்டங்களின் தொடா்ச்சியாக திருச்சி மாவட்ட கிளை சாா்பில் ஆட்சியரம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பழனியம்மாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கலையரசி, துணைத் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இணைச் செயலா் ராஜேஸ்வரி, பொருளாளா் மாா்க்கரேட், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பழனிசாமி, பொருளாளா் சுந்தரராஜன் ஆகியோா் பேசினா்.

இதுகுறித்து செவிலியா் சங்க நிா்வாகிகள் கூறுகையில், சம வேலைசெய்யும் செவிலியா்களின் பணி தன்மையை ஆராய்ந்து சம ஊதியத்தை 6 மாதத்திற்குள் வழங்க கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். ஆனால் இன்றுவரை சம ஊதியம் வழங்கவில்லை.

கரோனா காலத்திலும் சிரமம் சிறப்பாக பணியாற்றிய எங்கள் கோரிக்கைக்கு இதுவரை சுகாதாரத் துறை செவிசாய்க்கவில்லை. எனவே தமிழக அரசு, சுகாதாரத் துறை கவனத்தை ஈா்க்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.