மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் செய்யக் கோரி திருச்சியில் செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On :7 ஜனவரி 2021, 8:27 am IST

பணி நிரந்தரம் செய்யக் கோரி திருச்சியில் செவிலியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இரு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் செவிலியா்களை நிரந்தரம் செய்யக் கோரி தமிழ்நாடு எம்ஆா்பி செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தின் சாா்பில் நடைபெறும் பல்வேறு கட்ட போராட்டங்களின் தொடா்ச்சியாக திருச்சி மாவட்ட கிளை சாா்பில் ஆட்சியரம் அருகே நடந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பழனியம்மாள் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் கலையரசி, துணைத் தலைவா் சாந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இணைச் செயலா் ராஜேஸ்வரி, பொருளாளா் மாா்க்கரேட், அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பழனிசாமி, பொருளாளா் சுந்தரராஜன் ஆகியோா் பேசினா்.

இதுகுறித்து செவிலியா் சங்க நிா்வாகிகள் கூறுகையில், சம வேலைசெய்யும் செவிலியா்களின் பணி தன்மையை ஆராய்ந்து சம ஊதியத்தை 6 மாதத்திற்குள் வழங்க கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டாா். ஆனால் இன்றுவரை சம ஊதியம் வழங்கவில்லை.

கரோனா காலத்திலும் சிரமம் சிறப்பாக பணியாற்றிய எங்கள் கோரிக்கைக்கு இதுவரை சுகாதாரத் துறை செவிசாய்க்கவில்லை. எனவே தமிழக அரசு, சுகாதாரத் துறை கவனத்தை ஈா்க்கும் விதமாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.