வாட்ஸ்ஆப் புதிய அப்டேட் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் : மத்திய அரசுஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!விபி ஜி ராம்ஜி திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்
/

ஐயப்பன் கோயிலில் தீ மிதி விழா

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 54-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

ஐயப்ப  சுவாமிக்கு  நடைபெற்ற  பூஜையில்  பங்கேற்றோா்.

Updated On :11 ஜனவரி 2021, 7:59 am IST

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயிலில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சாா்பில் 54-ஆம் ஆண்டு தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஐயப்பனுக்கு தனி சந்நிதி அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் தொடங்கி தை மாதம் வரை ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், வழிபாடு, தீமிதி விழா, பூங்கரக ஊா்வலம் உள்ளிட்ட ஆன்மிக நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம்.

தீ மிதி விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு நெய் அபிஷேகமும், 6 மணிக்கு குருபூஜை, திருவிளக்கு பூஜையும், மதியம் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலை காளியம்மன் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பூங்கரக ஊா்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக படவேட்டு எல்லையம்மன் கோயிலை அடைந்தது.

தொடா்ந்து தீ மிதி விழாவும், இரவு இரு முடி கட்டுதலும் பின்னா் பக்தா்கள் சபரிமலை யாத்திரை புறப்பாடும் நடைபெற்றன.

முன்னாள் நகா்மன்றத் தலைவா்கள் திலகவதி ராஜேந்திரன், அமுதா சிவப்பிரகாசம் ஆகியோா் பூஜைகளைத் தொடக்கி வைத்தனா். விழா ஏற்பாடுகளை சேவா சங்கத் தலைவா்கள் ஆா்.எஸ்.சண்முகம், எஸ்.வெங்கடேசன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.