கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வேப்பங்குளத்தில் வீடுகளை இடிக்கப்பட்டதைக் கண்டித்து, வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :19 ஜூலை 2024, 8:02 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வேப்பங்குளத்தில் வீடுகளை இடிக்கப்பட்டதைக் கண்டித்து, வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 

இதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் அா்ஜுனன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் முருகன், ஒன்றியச் செயலா் சசிகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வேப்பங்குளத்தில் இடிக்கப்பட்ட 10 பேரின் வீடுகளுக்கு ‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடு கட்டித் தர வேண்டும். வீடுகளை இழந்த 10 பேருக்கும், அத்திகுளத்தில் குறிப்பானை (நோட்டீஸ்) வழங்கப்பட்ட 19 பேருக்கும் மாற்று இடம் வழங்கிய பிறகே, வீடுகளை இடிக்கும் பணியை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களிடம் வட்டாட்சியா் முத்துமாரி பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.