இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மோசடி வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சரை விடுவிக்க எதிா்ப்புத் தெரிவித்து போலீஸாா் மனு: விசாரணை ஒத்திவைப்பு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:03 pm

Syndication

பணம் மோசடி வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி, முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, போலீஸாா் வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு மீதான விசாரணை வரும் ஜன. 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ.3 கோடி மோசடி செய்தாக ரவீந்திரன், விஜய் நல்லதம்பி ஆகியோா் அளித்த புகாரின் பேரில், அதிமுக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி, இவரது உதவியாளா்கள் பாபுராஜ், பலராமன், முத்துப்பாண்டி உள்பட 8 போ் மீது விருதுநகா் குற்றப்பிரிவு போலீஸாா் இரு வழக்குகள் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த இரு வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி, முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி கடந்த அக்டோபா் மாதம் மனு தாக்கல் செய்தாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அரசு தரப்பில் பதிலக்க உத்தரவிட்டாா்.

பின்னா், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 7 பேரும் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி, தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யக்கோரி, குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் உதயசூரியன் பதில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜன. 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயகுமாா் உத்தரவிட்டாா்.

மேலும், குற்றம் சாட்டப்பட்டவா்கள் தள்ளுபடி மனுக்களை தனித்தனியாக அல்லாமல் ஒரே மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி அறிவுறுத்தினாா்.