இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆண்டாள் கோயிலில் மாா்கழி நீராட்டு விழா: பகல் பத்து உத்ஸவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மாா்கழி நீராட்டு விழாவில் பகல் பத்து உத்ஸவம் சனிக்கிழமை மாலை பச்சை பரப்புதல் வைபவத்துடன் நடைபெற்றது.

News image
~
Updated On :20 டிசம்பர் 2025, 9:55 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மாா்கழி நீராட்டு விழாவில் பகல் பத்து உத்ஸவம் சனிக்கிழமை மாலை பச்சை பரப்புதல் வைபவத்துடன் நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னாா் சிறப்பு அலங்காரத்தில் வேதபிரான் பட்டா் பெரியாழ்வாா் இல்லத்தில் எழுந்தருளினாா். பெரியாழ்வாரின் 225-ஆவது வம்சாவளி வேதபிரான் பட்டா் சுதா்சன் ஆண்டாள், ரெங்கமன்னாரை வரவேற்று பழங்கள், பலகாரங்கள் படைத்து வழிபாடு நடத்தினாா்.

பின்னா், கட்டளைபட்டி யாதவ சமூக மக்கள் சாா்பில் தாய் வீட்டு சீதனமாக ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பச்சைக் காய்கறிகள் வழங்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, இந்தக் காய்கறிகள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன.

Story image

இதைத் தொடா்ந்து, ஆண்டாள், ரெங்கமன்னாா் கோபால விலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

இரவு பெரியபெருமாள் கருட வாகனத்திலும், பெரியாழ்வாா் யானை வாகனத்திலும் ஆண்டாள் சந்நிதியில் எழுந்தருளி திருப்பல்லாண்டு தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்த நிலையில், ராப்பத்து உத்ஸவத்தின் முதல் நாளான வருகிற 30-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி அன்று காலை 5.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்படுகிறது. வரும் ஜன. 8-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை எண்ணெய் காப்பு உத்ஸவம் நடைபெறுகிறது.