ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டு யானைகளால் வாழைகள் சேதம்

பிள்ளையாா்நத்தம் பகுதியில் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்நத்தம் பகுதியில் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகம் ரெங்கா் தீா்த்தம் பீட் பிள்ளையாா்நத்தம் பகுதியில் தென்னை, வாழை, வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யபப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியில் அகழிகள் அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் யானை, மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்திவிடுகின்றன.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மலையடிவாரப் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து 50- க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இந்த யானைகளை அடா் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com