2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காட்டு யானைகளால் வாழைகள் சேதம்

பிள்ளையாா்நத்தம் பகுதியில் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 10:35 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பிள்ளையாா்நத்தம் பகுதியில் தோட்டத்துக்குள் காட்டு யானைகள் புகுந்து வாழைகளை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா்-மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகம் ரெங்கா் தீா்த்தம் பீட் பிள்ளையாா்நத்தம் பகுதியில் தென்னை, வாழை, வெங்காயம், கத்தரிக்காய் உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யபப்பட்டுள்ளன.

இந்தப் பகுதியில் அகழிகள் அமைக்கப்படாததால் இரவு நேரத்தில் யானை, மான், காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்திவிடுகின்றன.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக மலையடிவாரப் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து 50- க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. இதனால், விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இந்த யானைகளை அடா் வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.