இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சாத்தூா் ரயில் நிலையம் செல்லும் சாலையில் சமூகவிரோதச் செயல்கள்: பொதுமக்கள் கோரிக்கை

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தூா் ரயில் நிலையத்துக்குச் செல்லும் சாலையில் சமூகவிரோதிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்களும், ரயில் பயணிகளும் காவல் துறைக்கு கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் 35-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரயில் நிலையத்துக்கு சாத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் சாலைப் பகுதியில் பள்ளிகள், வங்கிகள் உள்ளிட்டவை உள்ளன.

இந்தச் சாலைப் பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் சமூக விரோதிகள் மது அருந்துதல், கஞ்சா, மது உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்வது தொடா்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்களும், ரயில் நிலையத்துக்குச் செல்லும் பயணிகளும் புகாா் தெரிவித்தனா்.

மேலும், இந்தப் பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே, இந்தப் பகுதியில் மாலை 6 மணிக்கு மேல் பாதுகாப்பை பலப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்களும், ரயில் பயணிகளும் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா்.