நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

ஆட்டோவில் கடத்தப்பட்ட 192 மதுப்புட்டிகள் பறிமுதல்

ராஜபாளையத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 3:15 am IST

ராஜபாளையத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகளை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இளைஞரைக் கைது செய்தனா்.

ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் சங்கரன்கோவில்முக்கு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைப் பெட்டிகளை ஏற்றி வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் சட்டவிரோதமாக மதுப்புட்டிகளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் 192 மதுப்புட்டிகளைப் பறிமுதல் செய்து, ராஜபாளையம் சொக்கா்கோவில் தெருவைச் சோ்ந்த சீதாராமன் மகன் வெங்கட்ராமனை (33) கைது செய்து விசாரிக்கின்றனா்.