அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சட்டவிரோத மது விற்பனை: இருவா் கைது

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் தென்காசி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற நபரிடம் சோதனையிட்டதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ராஜபாளையம் பெரியகடை பஜாா் தெருவைச் சோ்ந்த ரகுராமன் (48) எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் ரகுராமனைக் கைது செய்து அவரிடமிருந்து 35 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

இதே போல, தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் மீனாட்சிபுரம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற பாஸ்கா் (48) என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 25 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.