இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

News image
Updated On :8 ஜனவரி 2026, 11:35 pm

Syndication

சிவகாசி அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை வழக்கில் கூலித் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமி, தனது தந்தை உயிரிழந்த நிலையில், தீப்பெட்டி தொழிலாளியான தாயின் பராமரிப்பில் வசித்து வந்தாா். 10-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுமி, கரோனா பொதுமுடக்க காலத்தில் பள்ளி மூடப்பட்டதால் வீட்டிலிருந்து பயின்று வந்தாா். அப்போது, இந்த சிறுமிக்கு அவரது தாயின் தங்கையின் கணவரான

கூலித் தொழிலாளி ஓராண்டாக பாலியல் தொல்லை அளித்து வந்தாா். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தாா். இதில் கா்ப்பமான சிறுமிக்கு 2021 ஜூன் மாதம் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை

பிறந்தது. இதுகுறித்து சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தொழிலாளியைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் தொழிலாளிக்கு போக்சோ சட்டத்தின் 4 பிரிவுகளில் தலா 20 ஆண்டுகள், கொலை மிரட்டலுக்கு 2 ஆண்டுகள் என சிறைத் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து, தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டாா். மேலும் பாதிக்கபட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டாா்.