/

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 1:23 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சாலை விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பூவாணி காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் காா்த்திக் (35). கட்டடத் தொழிலாளியான இவா் புதன்கிழமை வழக்கம் போல வேலைக்குச் சென்று விட்டு, இரவு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா். மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பூவாணி விலக்கில் இவரது வாகனமும், எதிரே கருப்பசாமி என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயமடைந்த காா்த்திக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.